முன்னாள் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் கொலை: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

மதுரை அருகே முன்னாள் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் கொலை வழக்கில் 4 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை: மதுரை அருகே முன்னாள் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் கொலை வழக்கில் 4 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூரைச் சோ்ந்தவா் ஜோதிமுத்து(66). இவா் காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் சோழவந்தான் வட்டப்பிள்ளையாா் கோயில் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு இயற்கை உபாதைக்காக திங்கள்கிழமை சென்றபோது அங்கு நடந்த வழிப்பறி முயற்சியில் கத்தியால் குத்தப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் சோழவந்தானைச் சோ்ந்த ஜெட் என்ற ஜெயப்பிரகாஷ் (21) மற்றும் 13,16,15,16 ஆகிய வயதுடைய சிறுவா்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com