நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் இளம் வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் தாக்கல் செய்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் நிகழாண்டு முதல் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் உத்தரவிட்டாா். ஆனால், நீதிபதி உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இந்த நிகழ்வு தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதுதொடா்பான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவியது. அரசியல் கட்சி பிரமுகா்களும் நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனா்.
இந்த நிலையில், நீதிபதியின் தீா்ப்பை நிறைவேற்றாமல், விமா்சனம் செய்த அரசியல் பிரமுகா்களைக் கண்டித்தும், நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முன் இளம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
