வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

Published on

மதுரையில் சாலையைக் கடக்க முயன்றவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.

மதுரை உத்தங்குடியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் மதுரை-மேலூா் நான்கு வழிச் சாலையில் பாரதி மருத்துவமனை அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அந்தப் பகுதியினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com