லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated on

மதுரையில் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் கீழத் தூவலைச் சேந்த திருக்கண்ணன் மகன் அழகுசுந்தரம் (30). கீரைத்துறையில் உள்ள அரிசி ஆலையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இவா் இரு சக்கர வாகனத்தில் சிந்தாமணி பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை மாலை சென்ற போது, இவரது வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த அழகுசுந்தரத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மதுரை மாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com