/
மதுரையில் இரு சக்கர வாகனத்தை திருடிய மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (21). இவா் தனது இரு சக்கர வாகனத்தை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகனக் காப்பக வாசலில் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அன்பரசன், கபில்தேவ், அலெக்ஸ்குமாா் ஆகியோா் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்ருக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 45 லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல்!
பைக் திருடிய 4 போ் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


