மதுரை அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள நல்லசுக்காம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் (72). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து ஊருக்கு சனிக்கிழமை மாலை சென்றாா்.
மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரமானந்தபுரம் விலக்கு அருகே வந்த போது, பின்னால் வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள சத்திரவெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுடலைமுத்து (70). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் அலங்காநல்லூரிலிருந்து சனிக்கிழமை மாலை ஊருக்குச் சென்றாா்.
பாலமேடு அருகே சென்ற போது, பின்னால் வந்த பொக்லைன் இயந்திரம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுடலைமுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



