பழனியில் வீசிய சூறைக்காற்றால் மரம் சாய்ந்து விழுந்தது

பழனியில் புதன்கிழமை வீசிய சூறைக்காற்றால் மரம் சாய்ந்து விழுந்தது.
Updated on
1 min read

பழனியில் புதன்கிழமை வீசிய சூறைக்காற்றால் மரம் சாய்ந்து விழுந்தது.
 இங்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த சூறைக்காற்றால் மலைக்கோயில் ரோப்கார் இயங்குவதில் 2 மணி நேரம் சிரமம் ஏற்பட்டது. மேலும் பழனி தெற்குரத வீதியில் உள்ள ஆவணிமூலவீதி சந்திப்பில் அங்காளம்மன் கோயில் முன் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் மின்கம்பம் சேதமடைந்தது.
 இதையடுத்து அங்கு வந்த நகராட்சி உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு அலுவலர் சரவணன், முன்னாள் கவுன்சிலர் சக்தி மற்றும் மின்வாரிய அலுவலர் உள்ளிட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு சிலமணி நேரங்களில் பாதையை சீரமைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com