திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.
இக்கோயில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை பக்தர்கள் பறவைக் காவடி, அக்னிசட்டி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.