கொடைக்கானலில் சட்ட விரோதமாக மது விற்ற பெண் உள்ளிட்ட 3 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூர் ஊராட்சி கும்பூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸார் கும்பூர் பகுதியில் விசாரணை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் சின்னதுரை (59), குபேந்திரன் (43) மற்றும் ஜோதி (44) ஆகிய மூன்று பேரும் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடமிருந்து 25 மது பாட்டில்களை கைப்பற்றிய போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.