கொடைக்கானலில் ஆதிவாசிகள் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் முன் புதன்கிழமை வனப்பகுதிகளில் உள்ள விவசாய  நிலங்களை  வழங்கக் கோரி ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் முன் புதன்கிழமை வனப்பகுதிகளில் உள்ள விவசாய  நிலங்களை  வழங்கக் கோரி ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 இதில் கடுகுதடி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆதிவாசிகள் சுமார் 50-பேர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் விவசாயம் செய்வதற்கு, தங்களுக்கு நிலங்களை விரைவில் வழங்க வேண்டும். வனப் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொடைக்கானல் வனப் பகுதிகளில் ஆதிவாசி மக்களுக்கு விவசாய நிலங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிலர் வனப் பகுதியில் அனுமதியில்லாமல் விவசாயம் செய்து வருவதாகவும் அவற்றை வனத்துறையினர் சேதப்படுத்தியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்திய பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com