அரசுப் பேருந்து மோதி பனியன் நிறுவன தொழிலாளி சாவு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  அருகே அரசுப் பேருந்து மோதி புதன்கிழமை திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  அருகே அரசுப் பேருந்து மோதி புதன்கிழமை திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்தார்.
 திருப்பூர் நாவிதன் தோட்டம் கணேஷ் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜய் (28). இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் புதன்கிழமை ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கள்ளிமந்தையம் அடுத்துள்ள கள்ளிப் பள்ளம் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே கோவையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில் அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கள்ளிமந்தையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com