திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளருமான டில்லி பாபுவை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் ஒரு நிகழ்வின் போது தாக்கியதாகவும், மேலும் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்ததாகவும் கூறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர்ச் செயலாளர் ஆசாத் தலைமை வகித்தார். நகர்குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய செயலாளர் அஜெகோஸ், நகர்குழு உறுப்பினர் அரபுமுகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் பாண்டி கண்டன உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com