பழனியில் ஆவணி கடைசி முகூர்த்தநாளையொட்டி புதன்கிழமை அடிவாரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் அடிவாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களிலும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் பைபாஸ் குளத்து சாலையில் பிளாட்பாரங்களில் வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
மேலும் திருமணத்துக்கு பங்கேற்க வந்தவர்கள் பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக அலைமோதினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுமண தம்பதியினரும் பல இடங்களில் நடந்தே சென்றனர்.