திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணாநகரிலுள்ள செல்வ விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பின்னர், உலக நன்மை மற்றும் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சதுர்த்தி விழா குழுவினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.