பழனியில் மாநில அளவிலான மகளிர் பளுதூக்கும் போட்டிகள் தொடக்க விழா

பழனி அடிவாரம் இட்டேரி ரோடு தனியார் மஹாலில் சனிக்கிழமை ஐந்தாவது ஜூனியர் மற்றும் சீனியர் மகளிருக்கு மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் தொடக்க விழா மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கத்தின் புத


பழனி அடிவாரம் இட்டேரி ரோடு தனியார் மஹாலில் சனிக்கிழமை ஐந்தாவது ஜூனியர் மற்றும் சீனியர் மகளிருக்கு மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் தொடக்க விழா மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கத்தின் புதிய தலைவர் சரவணப்பொய்கை ஸ்ரீகந்தவிலாஸ் பாஸ்கரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற போட்டிகள் தொடக்க விழாவை மருத்துவர் கீதாசுப்புராஜ் தொடக்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு ஸ்ரீமத் போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமை வகித்தார். தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கத்தின் சீனியர் தலைவர் தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ., கல்விக் குழும நிர்வாக தலைவர் ரகுராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஞாயிற்றுக்கிழமையும் போட்டிகள் நடத்தப்பட்டு மாலை பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.
பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com