பழனியை அடுத்த வண்டி வாய்க்கால் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மக்களவை வேட்பாளர் மன்சூர் அலிகான் மீன் மற்றும் வாத்து வியாபாரம் செய்பவர்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இவருக்கு ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குணமடைந்த அவர் திங்கள்கிழமை பழனி சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
பின்னர் வண்டி வாய்க்கால் பகுதிக்கு பிரசாரத்துக்கு சென்றார். அப்போது சாலையோர வாத்து விற்கும் கடைக்கு சென்று வாத்துகளுக்கு தீனி போட்டு அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அருகேயிருந்த மீன் கடைக்கு சென்று மீனை துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து மீன்வியாபாரியாக மாறி பிரசாரம் செய்தார்.