பழனி கோயிலில் தீயில் சிக்கி சமையல்காரர் பலத்த காயம்

பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை அன்னதான கூடத்தில் பணியின் போது சமையல்காரர் தீக்காயமடைந்தார்.


பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை அன்னதான கூடத்தில் பணியின் போது சமையல்காரர் தீக்காயமடைந்தார்.
பழனி மலைக்கோயில் அன்னதான கூடத்தில் சமையலராக வேலை செய்பவர் பாலசமுத்திரத்தை சேர்ந்த மாரியப்பன்(45).  இவர் சனிக்கிழமை அதிகாலை மலைக்கோயிலில் எரிவாயு அடுப்பை பற்ற வைக்கும் போது எதிர்பாராத விதமாக தீ அவரது முகத்தில் பட்டது. இதில் அவர் பலத்த தீக்காயமடைந்தார்.  உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், மேல் சிகிச்சைக்காக  மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  இதுகுறித்து அடிவாரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com