கொடைரோடு அருகே மான் இறைச்சி விற்பனை செய்த இருவரை கைது செய்த வனத்துறையினர், அவர்களுக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பகுதியில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, சிறுமலை வனச்சரக அலுவலகத்துக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சிறுமலை வனச்சரகர் மனோஜ் தலைமையில், வனவர் சக்திவேல், வனக் காப்பாளர் சுந்தரராஜன் ஆகியோர் கொடைரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கொடைரோடு பயணியர் விடுதி அருகே மான் இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து மான் இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட கொடைரோடு அம்மாப்பட்டியைச் சேர்ந்த சிமியோன் ராஜா (31), அம்மையநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மோசஸ் (67) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் இருவருக்கும் தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.