கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி குதிரை சாவு

கொடைக்கானல் செண்பகனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையை,

கொடைக்கானல் செண்பகனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையை, காட்டெருமை செவ்வாய்க்கிழமை தாக்கியதில் குதிரை உயிரிழந்தது. 
கொடைக்கானல் செண்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருக்கு, சொந்தமான குதிரை உள்ளது. இவர், விவசாயத்துக்கும், சுமைகள் தூக்குவதற்கும் குதிரையை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்புள்ள தோட்டத்தில்  குதிரை மேய்ந்து கொண்டிருந்துள்ளது. அப்போது, அங்கு வந்த காட்டெருமை  தாக்கியதில், குதிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 
இதைத் தொடர்ந்து, ஜான்சன் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வனத் துறையினர் சென்று பார்வையிட்டனர். 
மேலும், கால்நடைத் துறை மருத்துவர் ஹக்கீம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, தோட்டத்திலேயே குதிரை புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com