பழனி நகருக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவப் படை வீரர்கள், திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் கொடி அணிவகுப்புக்கு, டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமை வகித்தார். பழனி நகர காவல் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பானது, பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், பெரியகடை வீதி என நகரின் முக்கிய பகுதிகளின் வழியே சென்றது. இதில், துணை ராணுவப் படையினர், போலீஸார், ஊர்க் காவல் படையினர் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.