பழனி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் மனோஜ்(25). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இவரும், இவரது நண்பர் கருப்புச்சாமியும், இருசக்கர வாகனத்தில் பழனி நோக்கி வந்தனர். கணக்கன்பட்டி அருகே வந்த போது எதிரே பழனியில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவர்களது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த கருப்புச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.