கொடைக்கானலில் சாய்பாபா நினைவு நாள்

கொடைக்கானலில் சாய்பாபாவின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


கொடைக்கானலில் சாய்பாபாவின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஸ்ரீ சாய்சுருதி அறக்கட்டளை சார்பில் கொடைக்கானலிலுள்ள சாய்பாபா இல்லத்தில் உள்ள சாய்பாபா படத்திற்கு மாலை அணிவித்து வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு இலவச கம்பளி, வேட்டி, சேலை மற்றும் சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டன.  அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய்சுருதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் சாய்பாபா பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com