செந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 2) மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்திருப்பதாவது:
செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகின்றன.
இதனால் செந்துறை, கோசுக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், மாதவநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, குடகிப்பட்டி, மங்களபட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.