இரட்டைக் கொலையில் தொடர்புடையவர் தற்கொலை

இரட்டைக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர்,  ஒட்டன்சத்திரம் தனியார் விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

இரட்டைக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர்,  ஒட்டன்சத்திரம் தனியார் விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
ஒட்டன்சத்திரம் சம்சுதீன் நகரைச் சேர்ந்தவர் அமீர் அம்ஜா மகன் முகமது பராக் அலி (36). இவர் மீது, 4 ஆண்டுகளுக்கு முன் ஒட்டன்சத்திரத்தில் நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடர்பான குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.  இந்நிலையில், பராக் அலி ஞாயிற்றுக்கிழமை சி.எப். மருத்துவமனை எதிரே உள்ள ஒரு தனியார் விடுதியிலுள்ள இவரது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 
இது குறித்து இவரது மனைவி நிலோபர் நிஷா (34)  அளித்த புகாரின்பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்ய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com