ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஆண்டாள் தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. 
பின்னர், ஆண்டாள் சன்னிதி முன்பாக ஸ்ரீநிவாசப் பெருமாள் மாப்பிள்ளையாகவும், ஆண்டாள் நாச்சியார் மணப் பெண்ணாகவும் அழைத்து வரப்பட்டனர். அங்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார மற்றும் ஆராதனைக்குப் பின், ஆண்டாளுக்கு, ஸ்ரீநிவாசப் பெருமாள் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com