தாண்டிக்குடி கோயிலில் தீச்சட்டி ஊர்வலம்

கொடைக்கானல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
  கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் உள்ள மந்தை காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அங்காரம் செய்யப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் பக்தர்கள் சார்பில் தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலமானது தாண்டிகுடி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று கோயிலை அடைந்தது. அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com