ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பணிகள் உதவி மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். மாவட்ட நீதிபதி அம்பிகா, வழக்குரைஞர்கள் கனிமொழி, பாக்கியலட்சுமி, ஒட்டன்சத்திரம் மண்டல துணை வட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சட்டப்பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் ஆசிரியர்கள் பாண்டியராஜன், சாந்தி, பஞ்சவர்ணம், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.