ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீட்டில் மர்ம நபர் புகுந்து 11 பவுன் நகை களை திருடிச் சென்றுள்ளார்.

ஒட்டன்சத்திரம் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீட்டில் மர்ம நபர் புகுந்து 11 பவுன் நகை களை திருடிச் சென்றுள்ளார்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள க.அத்திக்கோம்பையைச் சேர்ந்தவர் சண்முகம் (72). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர் அதே ஊரில் உள்ள ஆசிரியர் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
இவரது மனைவி பொன்னுத்தாய் (60). இவர் செவ்வாய்க்கிழமை இரவு கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி அலமாரியில் வைத்து விட்டு தூக்கச் சென்று விட்டராம்.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை வீட்டின் பின்புறமுள்ள கதவை உடைத்துப்புகுந்த மர்ம நபர் ஒருவர் அலமாரியில் இருந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை திருடிக் கொண்டு தப்பி ஒடிவிட்டாராம். 
இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் சண்முகம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com