கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாகனம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
       கொடைக்கானல் மற்றும் மன்னவனூர், தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள அரசு மருத்துவனைகளில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டன. 
   ஆனால் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும்போது மலைச் சாலைகளிலேய அடிக்கடி பழுதாகி நின்றது. 
    இதனால் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வசதிகளும் உள்ள  நவீன புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com