திண்டுக்கல் நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக அக்கட்சியின் நகரச் செயலர் பி.ஆசாத் தலைமையிலான குழுவினர், மாநகராட்சி மேலாளர் வில்லியமிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக ஆசாத் கூறியதாவது:
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெறும் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.