திண்டுக்கல் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்

திண்டுக்கல் நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. 
 இதுதொடர்பாக அக்கட்சியின் நகரச் செயலர் பி.ஆசாத் தலைமையிலான குழுவினர், மாநகராட்சி மேலாளர் வில்லியமிடம்  மனு அளித்தனர். இதுதொடர்பாக ஆசாத் கூறியதாவது: 
    திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும்.  நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெறும் பேருந்து நிலைய விரிவாக்கப்  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com