அரசு மகளிர் கல்லூரியில் தலைக்கவச விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தலைக் கவச விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தலைக் கவச விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பாக நடந்த முகாமுக்கு, கல்லூரி முதல்வர் பெத்தா லட்சுமி தலைமை வகித்தார்.  வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன், சார்பு-ஆய்வாளர் கலையரசன் ஆகியோர் முகாமில் பங்கேற்று தலைக்கவசத்தின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதில் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் பேராசிரியை லட்சுமி வரவேற்றார். மாணவி மோகனப்பிரியா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com