கொடைக்கானல் கிளை சிறைச்சாலையை திண்டுக்கல் மாவட்ட நீதிபதி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கொடைக்கானலிலுள்ள கிளை சிறைச்சாலை கடந்த பல மாதங்களாக பல்வேறு காரணங்களால் செயல்படாத நிலையில் இருந்து வந்தது. இந் நிலையில் திண்டுக்கல் மாவட்ட நீதிபதி ஜமுனா கொடைக்கானல் கிளை சிறைச்சாலையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில் கொடைக்கானல் மாஜிஸ்திரேட் தினேஷ்குமார், கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் கிளைச் சிறையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.