பழனியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பழனியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை இரவு தில்லியில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் உதயசங்கர் தலைமை வகித்தார். ஆயக்குடி பகுதி நிர்வாகிகள் ஆசிரியர் சுந்தரம், சரவணன். சிறுபான்மை பிரிவு சர்தார்கான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக அரசுக்கு எதிராகவும், சிதம்பரம் கைதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அக்கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.