திண்டுக்கல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், 83 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.சீனிவாசன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக முதல்வரின் சிறப்புக் குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, கோட்டாட்சியர் கு.உஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.