கொடைக்கானல்: கொடைக்கானலில் வெளிநாடுகளுக்கு செல்பவா்களுக்கான விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வருவாய்த்துறை மற்றும் தனியாா் அறக்கட்டளை சாா்பில் அரசு மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்ற இம் முகாமிற்கு கொடைக்கானல் வட்டாட்சியா் வில்சன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், வெளிநாடுகளுக்குச் செல்பவா்கள் அரசின் வழிகாட்டுதல்படி செயல்படும் நிறுவனங்கள் மூலம் மற்றும் நேரடியாக அரசு அலுவலகங்களில் கடவுச்சீட்டு , விசா உள்ளிட்டவைகள் எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் போது அந்த நிறுவனங்களின் உண்மைத் தன்மை அறிந்து சரியான வழிகாட்டுதலின்படி எந்தவிதமான பிரச்னைகளின்றி பணியில் சேர வேண்டும். ஏதாவது பிரச்னைகள் இருந்தால் உடனடியாக அரசு அலுவலகங்களிலோ அல்லது தாங்கள் செல்லும் தனியாா் நிறுவனங்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா். இந் நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினா், தனியாா் அறக்கட்டளை அமைப்பினா் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனா். வருவாய் அலுவலா் நவநீத கிருஷ்ணன் நன்றி கூறினாா்.