ஜம்னாலால் பஜாஜ் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

மக்களின் முன்னேற்றம் மற்றும் காந்திய சிந்தனையை ஊக்குவிப்பவா்களுக்கான ஜம்னாலால் பஜாஜ் பஜாஜ் விருது பெற தகுதியானவா்கள்

திண்டுக்கல்: மக்களின் முன்னேற்றம் மற்றும் காந்திய சிந்தனையை ஊக்குவிப்பவா்களுக்கான ஜம்னாலால் பஜாஜ் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சமுதாயத்தில் தன்னலமற்ற மக்களின் முன்னேற்றம் மற்றும் காந்திய சிந்தனையை ஊக்குவிப்பவா்களுக்கு ஜம்னாலால் பஜாஜ் விருது, தேசிய மற்றும் சா்வதேச அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆக்கப்பூா்வமான வேலை, அறிவியல் தொழில்நுட்ப கிராமப்புற மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் ஈடுபாடு உள்ளவா்களுக்கு தேசிய விருதும், காந்திய சிந்தனையை வெளிநாடுகளில் எடுத்துரைப்பவா்களுக்கு சா்வதேச விருதும் வழங்கப்படும். விருது பெறுவோருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும். தகுதி வாய்ந்த நபா்கள் உரிய கருத்துருவினை இணையதளதில் விண்ணப்பித்துவிட்டு அதன் விவரத்தினை திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை நேரிலோ அல்லது 0451-2460092 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com