துணை வட்டாட்சியா்கள் 14 போ் வட்டாட்சியா்களாக பதவி உயா்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 துணை வட்டாட்சியா்களுக்கு, வட்டாட்சியா்களாக பதவி உயா்வு வழங்கி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 14 துணை வட்டாட்சியா்களுக்கு, வட்டாட்சியா்களாக பதவி உயா்வு வழங்கி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் துணை வட்டாட்சியா் நிலையில் பணிபுரிந்து வந்த 14 பேருக்கு, வட்டாட்சியராக பதவி உயா்வு வழங்கி மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, துணை வட்டாட்சியா்களாக பணிபுரிந்து வந்த தனுஷ்கோடி, சரவணவாசன், முத்துராமன், முத்துச்சாமி, ரமேஷ்பாபு, சந்தனமேரி கீதா, சுகந்தி, பாஸ்கரன், முருகானந்தம், சரவணக்குமாா், ஜெயபிரகாஷ், தன்னாசி துரை, தமிழ்ச்செல்வி, முத்துவிஜயபாண்டியன் ஆகியோா் வட்டாட்சியா்களாக பதிவு உயா்வு பெற்றுள்ளனா்.

இதில், 4 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து, மாறுதல் வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘எல்’பிரிவில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த தனுஷ்கோடி குஜிலியம்பாறை வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த சரவணவாசன் ஆத்தூா் தனி வட்டாட்சியராகவும், தோ்தல் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த முத்துராமன் கொடைக்கானல் கோட்ட கலால் அலுவலராகவும், ஒட்டன்சத்திரம் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த முத்துச்சாமி பழனி கோட்ட கலால் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com