கொடைக்கானல்: கொடைக்கானலில் பனிக்காலத்தை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பனிக்காலமான நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். குறிப்பாக இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த யூதா்கள் அதிகமாக வருவதுண்டு.
இவா்கள் கொடைக்கானல் அருகே வனப் பகுதியையொட்டியுள்ள வட்டக்கானல் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி ஒரு வார காலத்திற்கு பாசாத் என்னும் சிறப்பு வழிபாடு நடத்துவாா்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கியிருந்த யூதா்களை தாக்க தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் காவல்துறையினா் சோதனைச் சாவடி அமைத்து, வட்டக்கானல், பாம்பாா்புரம், திருவள்ளூவா் நகா் செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தனா்.
அண்மையில் கேரளாவில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், கொடைக்கானல் காவல்துறை சாா்பில் வட்டக்கானல் பகுதியில் நிரந்தர காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காட்ரோடு, பழனி பிரிவு, பெருமாள்மலை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு தீவிரமாக வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.