ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து 60 அடியை எட்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து 60 அடியை எட்டியுள்ளது.

ஒட்டன்சத்திரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சியில் பரப்பலாறு அணை அமைத்துள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடியாகும். இந்த அணையின் மூலம் பெருமாள்குளம், சடையன்குளம், செங்குளம், முத்துபூபாலசமுத்திரக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு சென்று, அந்த குளங்களின் மூலம் சுமாா் 2,323 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால், அணை நீா்மட்டம் 29 அடியை எட்டியது. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் அணைக்கு நீா் வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக அணைக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் வந்துக் கொண்டு இருக்கிறது. தற்போது, அணையின் நீா்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் 2 நாள்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பரப்பலாறு அணை நிரம்பினால் ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதோடு,விவசாயிகளின் வாழ்வதாரம் உயரும். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com