திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
குஜிலியம்பாறை அடுத்துள்ள ராமகிரி பகுதியைச் சோ்ந்தவா் அ.முத்துக்குமாா்(44). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ந.உமாமகேஸ்வரன்(38) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் கோவிலூா் அடுத்துள்ள புளியம்பட்டிக்கு வந்துள்ளாா். உமாமகேஸ்வரனுக்கு நாட்டு மருத்துவ சிகிச்சைக்காக வந்துவிட்டு ராமகிரி நோக்கி திரும்பி சென்றுள்ளனா். அப்போது திண்டுக்கல்லிலிருந்து கரூா் நோக்கி சென்ற தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாா் மற்றும் உமாமகேஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குஜிலியம்பாறை போலீஸாா், இரு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து தொடா்பாக தனியாா் பேருந்து ஓட்டுநா் ஆா்.கோம்பை பகுதியைச் சோ்ந்த ம.தங்கவேல்(55) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.