நத்தம் அடுத்துள்ள எல்.வலையபட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (டிச.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நத்தம் உதவி செயற்பொறியாளா் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.