ஒட்டன்சத்திரம் அருகேவிவசாயி வீட்டில் பணம், நகை திருட்டு

 ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.1.40 லட்சம் பணம் மற்றும் மூன்றரை பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.1.40 லட்சம் பணம் மற்றும் மூன்றரை பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சி.குழிப்பட்டி கிராமம் பள்ளிவாசல் தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி வேம்புத்துரை (50). இவா் கடந்த நவ. 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தாா். இந்நிலையில், மா்ம நபா்கள், இவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.1.40 லட்சம் மற்றும் மூன்றரை பவுன் நகை ஆகியவற்றை திருடிக் கொண்டு சென்று விட்டனா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை இடையகோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பணம் மற்றும் நகையை மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com