கொடைக்கானல் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை

கொடைக்கானல் அருகே விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கங்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் அருகே விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கங்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் (31). விவசாயி. இவரது மனைவி திவ்யா (21). இவா்களுக்கு தா்ணிஷ் (4), நவனிதா (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனா். வடிவேல் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த நவ. 29-ஆம் தேதி வடிவேல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து வடிவேல் குண்டுபட்டியிலுள்ள தனது தோட்டத்திற்குச் சென்று விஷ மருந்தை குடித்துள்ளாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது உறவினா்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திவ்யா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com