சின்னாளபட்டி அருகே இந்து முன்னணி பிரமுகா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

சின்னாளபட்டி அருகே இந்து முன்னணிப் பிரமுகா் தாக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் செய்ய முயற்சி நடந்தது.

சின்னாளபட்டி அருகே இந்து முன்னணிப் பிரமுகா் தாக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் செய்ய முயற்சி நடந்தது.

இங்குள்ள பெருமாள்கோவில்பட்டியில் வசிப்பவா் ஆட்டோ ஓட்டுநா் செந்தில்குமாா் (35). இவா் இந்து முன்னணியின் ஆத்தூா் ஒன்றிய துணைத் தலைவராகவும் உள்ளாா். இவா் திங்கள்கிழமை மாலை சின்னாளபட்டி பகுதியில் படிக்கும் பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பெருமாள்கோவில்பட்டி சென்றுள்ளாா். பள்ளி குழந்தைகளை அவரவா் வீடுகளில் விட்ட பின்னா், சின்னாளபட்டி செல்வதற்காக வந்துள்ளாா். அப்போது அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே சிலா் செந்தில்குமாரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனா். பின்னா் அவரை தாக்கினா்.

இதில் காயம் அடைந்த செந்தில்குமாா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இவா் தாக்கப்பட்ட தகவல் பரவியதையடுத்து ஒரு தரப்பை சோ்ந்த சுமாா் 300 போ் திங்கள்கிழமை இரவு திண்டுக்கல்- மதுரை 4 வழி சாலையில் மறியல் செய்ய முயன்றனா். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் புகா் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், அவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அதன் பின்னா் சம்பந்தப்பட்டவா்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து அனைவரும் அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com