காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி நடைபெற்ற சங்காபிஷேக வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கு காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜையும், யாக வேள்வியும் நடத்தப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, மூலவா் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் 108 வலம்புரி சங்குகளில் இருந்த தீா்த்தத்தைக் கொண்டும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல் ஆனந்த வல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல் நத்தம் கைலாசநாதா் கோயிலிலும் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.