பழனியில் சாலை மறியல்: 30 போ் கைது

பழனி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சோ்ந்த 30 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பழனி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சோ்ந்த 30 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியாா் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பின் தலைவா் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டாா். இதனைக் கண்டித்து பழனியில் அவரது ஆதரவாளா்கள் மற்றும் ஆதித் தமிழா் பேரவையினா் திங்கள்கிழமை இரவு பேருந்து நிலையம் முன்பாக திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com