குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கைது

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரை
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முயற்சி மேற்கொண்டனா். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து, மத்திய அரசுக்கும், சட்டத் திருத்த மசோதாவுக்கும் எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், பதாகைகளை ஏந்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.ஆா்.பாலாஜி தலைமையில் கோஷமிட்டனா்.

இதனை அடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனா்.

திமுக சாா்பில் நகல் கிழிப்பு போராட்டம்: முன்னதாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சட்டத் திருத்த மசோதா நகல் கிழிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com