ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பணியாளரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஈஸ்வரன் (54). இவர், திங்கள்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது, அவரை வழிமறித்த நபர், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஈஸ்வரன் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காந்தி நகரைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (36) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.