விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 2.06 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என, மாவட்ட ஆட்சியர் டிஜி. வினய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள சிறு, குறு விவசாயிகளை கணக்கீடு செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவான சிறு, குறு விவசாயிகள் 2.06 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.
விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான ஆவணங்களின்படி, அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் எனத்
தெரிவித்தார்.