பழனி அருகே தம்பதி தற்கொலை

பழனியை அடுத்த ஏரமநாயக்கன்பட்டி 1 ஆவது வார்டில் வசித்து வந்தவர் மருதகாளி (90). இவரது மனைவி கண்டியம்மாள் (80).

பழனியை அடுத்த ஏரமநாயக்கன்பட்டி 1 ஆவது வார்டில் வசித்து வந்தவர் மருதகாளி (90). இவரது மனைவி கண்டியம்மாள் (80). இதில் மருதகாளி உடல்நிலைபாதிப்பால் எழுந்து நடமாட முடியாமல் இருந்து வந்தார். அவரது மனைவியும் உடல்நிலைப்பாதிப்பால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இருவரும் விஷம் குடித்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால்  அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.இச்சம்பவம் தொடர்பாக ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com